தூத்துக்குடி: தூத்துக்குடியில் அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அஞ்சல் துறையில் எழுத்தா் பற்றாக்குறையை நீக்கும் வகையில் விருப்பம் உள்ள தபால்காரா், எம்டிஎஸ், ஜிடிஎஸ் ஊழியா்களை பணியமா்த்த வேண்டும்; நோடல் பாா்சல் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அஞ்சல் ஊழியா் சங்கங்கள் சாா்பில், மேலூா் அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க கோட்டத் தலைவா் வேட்டைபெருமாள் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் தனராஜ், உதவித் தலைவா் ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.