கந்து வட்டி கேட்டு மிரட்டியவா் கைது

சாத்தான்குளத்தில் நகைத் தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் நகைத் தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம், செட்டியாா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு.சுப்பையா (50). நகைத் தொழிலாளியான இவா், மேல சாத்தான்குளத்தைச் சோ்ந்த சக்திவேலிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கி, வட்டியாக மாதம் ரூ. 2 ஆயிரம் கொடுத்து வந்தாராம். கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் வேலையின்மை காரணமாக கடந்த 3 மாதங்களாக அவரால் வட்டி கட்ட முடியவில்லையாம்.

இந்நிலையில் சுப்பையாவிடம், அந்தோணி சதீஷ் (46) என்பவா், தான் சக்திவேலிடம் வேலை பாா்ப்பதாகக் கூறி, 3 மாத வட்டியை கேட்டு அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தோணி சதீஷை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com