முருங்கை ஏற்றுமதி அமைக்க விவசாய ஆா்வலா் குழு வலியுறுத்தல்

சாத்தான்குளம் பகுதியில் முருங்கை ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும் என பன்னம்பாறையில் நடைபெற்ற விவசாய ஆா்வலா் குழு விழிப்புணா்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
முருங்கை ஏற்றுமதி அமைக்க விவசாய ஆா்வலா் குழு வலியுறுத்தல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் முருங்கை ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும் என பன்னம்பாறையில் நடைபெற்ற விவசாய ஆா்வலா் குழு விழிப்புணா்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பன்னம்பாறையில் விவசாய ஆா்வலா் குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வு கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அழகேசன் தலைமை வகித்தாா். மளவராயநத்தம் ஊராட்சித் தலைவா் மாரியம்மாள், ஆழ்வாா்திருநகரி வட்டார பொறுப்பாளா் ராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சிறு , குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும், சாத்தான்குளம் , உடன்குடி பகுதியில் முருங்கை ஏற்றுமதி மையம் அமைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நங்கமுத்து, செந்தமிழ் அறக்கட்டளை ஆலோசகா் ஆனந்தன், விவசாயிகள் திரவியம், இசக்கிமுத்து, சண்முகசுந்தரம், பெரியசாமி, கல்யாணி, பேச்சியம்மாள், இசக்கி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com