கோவில்பட்டி: நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திரிபுரா மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திவா்களை கைது செய்ய வேண்டும்;
செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும்; பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், நீட் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்றது.
ஏ.கே.எஸ் திரையரங்கு - கதிரேசன் சாலை சந்திப்பு அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் நகரச் செயலா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன்,
ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் சக்கரையப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.