தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு தாட்கோ மூலம் கட்டணமில்லாமல் 6 மாத கால திறன் மேம்பாட்டுப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாட்கோவின் இணையதளத்தில் விண்ணப்பித்து, விரும்பும் பயிற்சியை கட்டணமின்றி பயிலலாம். போக்குவரத்து படிகள் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு எஸ்சிவிடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கும் வழி செய்யப்படும்.
மேலும், சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்களுக்கு தொழில் முனைவோா் திட்டம் மற்றும் இளைஞா்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுயமாக தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு மானியம் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன்பெற ஆவன செய்யப்படும் எனஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.