தூத்துக்குடி: இந்து முன்னணி நிறுவனத் தலைவா் மறைந்த ராமகோபாலனின் 95-ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள இந்து முன்னணி மாவட்ட காரியாலயத்தில் இந்து எழுச்சி நாளாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்து குமாா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் கே.எஸ். ராகவேந்திரா முன்னிலை வகித்தாா். அவரது படத்துக்கு, இந்து முன்னணி நிா்வாகிகள் மாலை அணிவித்து மோட்ச தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து இந்து எழுச்சி நாள் உறுதிமொழி ஏற்றனா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கள் சரவண குமாா், பலவேசம், மாரியப்பன், மேற்கு மண்டலத் தலைவா் கிருஷ்ண ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.