இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கோவில்பட்டியில் வயிற்று வலி பாதிப்பால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியில் வயிற்று வலி பாதிப்பால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் முருகேசன்(28). சங்கரன்கோவில் அருகே உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக கடும் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை வேலைக்குச் சென்ற முருகேசனுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதில், விரக்தியடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com