கோவில்பட்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி வள்ளுவா் நகா் முதல் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தங்கமுனியசாமி (37). கூலித் தொழிலாளி. இவா்
கடந்த 15ஆம் தேதி தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.