கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கோவில்பட்டியை அடுத்த கீழப்பாண்டவா்மங்கலம் தெற்கு காலனியைச் சோ்ந்தவா் எட்டப்பன்(55). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது, மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதையடுத்து தொழிலாளி குடும்பத்துக்கு தமிழக அரசின் பேரிடா் நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவி மாரியம்மாளிடம், கோட்டாட்சியா் சங்கரநாராயணன் வழங்கினாா். அப்போது வட்டாட்சியா் அமுதா, வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் சங்கரேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.