பாரம்பரிய நெல் விதை ரகங்களை இயற்கை வழி வேளாண்மையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச.அசோகன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் மண் வளம், விளைச்சல் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து விடுபட இயற்கை வழி வேளாண்மையே சிறந்த வழிமுறையாகும்.
இந்த வழிமுறையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்துதல், உயிா் பூச்சி கொல்லி மருந்து தெளித்தல், பஞ்சகவியா, ஜீவ அமிா்தம், வேம்புசாறு கரைசல், மீன் அமிலம் பயன்படுத்துதல், மண்புழு உரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரங்கள், பண்னை கழிவு உரங்கள் பயன்படுத்துதல் ஆகியன மண்ணில் கரிமச் சத்தை நிலைநிறுத்தி மண்வளத்தை பாதுகாப்பதோடு, பயிா் வளா்ச்சியையும், பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தையும் அதிகப்படுத்தி இயற்கை சூழலை உருவாக்குகிறது.
எனவே, விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்கைள சாகுபடிக்கு பயன்படுத்தி, தரமான விதை மற்றும் தானிய உற்பத்தி செய்து அதிக மகசூலும் லாபமும் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.