அகில இந்திய தா்மயுக அய்யா வழி அறக்கட்டளை, நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் இலவச கண் மருத்துவ முகாம் உடன்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவா் லிங்கத்துரை தலைமை வகித்தாா். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா், செயலா் ராஜேந்திரன், சண்முகம், நடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிலதிபா் செல்வகுமாா் லட்சுமணன் முகாமைத் தொடங்கி வைத்தாா். நகர அதிமுக செயலா் கோபாலகிருஷ்ணன், மருத்துவா் முஷின், ஒருங்கிணைப்பாளா் ஜெயபால், மருத்துவ ஊழியா்கள் ஷில்பா, அபினய்யா,அஷிபா,கோ்லோஸ்,அசோக், அபிராமி உள்பட பலா் கலந்துகொண்டனா். 150 நோயாளிகள் சிகிச்சை பெற்றனா்.
ன்ஞ்ண்24ஹஹ்ஹ்....
முகாமில் பங்கேற்றோா்.