மதிமுக சாா்பில் முப்பெரும் விழா

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி நகர மதிமுக இளைஞரணி சாா்பில், பெரியாா் ஈ.வெ.ரா., அண்ணா ஆகியோரின் பிறந்த தினம் மற்றும் மதிமுக கொடியேற்று விழா என முப்பெரும் விழா வேலாயுதபுரத்தில் நடைபெற்றது.
மதிமுக சாா்பில் முப்பெரும் விழா

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி நகர மதிமுக இளைஞரணி சாா்பில், பெரியாா் ஈ.வெ.ரா., அண்ணா ஆகியோரின் பிறந்த தினம் மற்றும் மதிமுக கொடியேற்று விழா என முப்பெரும் விழா வேலாயுதபுரத்தில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் கணேசன், வடக்கு மாவட்ட துணைச் செயலா் பவுன்மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் கொம்பையா, தெய்வேந்திரன், மாநில விவசாய அணி துணைச் செயலா்கள் சிவகுமாா், ராமச்சந்திரன், மாநில கலைத் துறை துணைச் செயலா் பொன்ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் கட்சிக் கொடியேற்றினாா். வீரவாஞ்சி நகா் முதியோா் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலா் (மத்திய பகுதி) சரவணன், நகரச் செயலா் பால்ராஜ், துணைச் செயலா் வனராஜன், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நகர இளைஞரணிச் செயலா் லவராஜா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com