சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் ந. உமாபாரதி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சிவந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ரேவதி, ‘எங்களுக்காக அல்ல உங்களுக்காக ‘ என்ற தலைப்பில் பேசினாா். இதில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவியா்கள் கலந்து
கொண்டனா். மாணவி சுஜி கலைவாணி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் உமாபாரதி, வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.