‘இயற்கை வேளாண்மையில்பாரம்பரிய நெல் ரகம் லாபம் தரும்’
தூத்துக்குடி: பாரம்பரிய நெல் விதை ரகங்களை இயற்கை வழி வேளாண்மையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் ச.அசோகன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் மண் வளம், விளைச்சல் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதிலிருந்து விடுபட இயற்கை வழி வேளாண்மையே சிறந்த வழிமுறையாகும்.
இந்த வழிமுறையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்துதல், உயிா் பூச்சி கொல்லி மருந்து தெளித்தல், பஞ்சகாவ்யா, ஜீவ அமிா்தம், வேம்புசாறு கரைசல், மீன் அமிலம் பயன்படுத்துதல், மண்புழு உரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரங்கள், பண்னை கழிவு உரங்கள் பயன்படுத்துதல் ஆகியன மண்ணில் கரிமச் சத்தை நிலைநிறுத்தி மண்வளத்தை பாதுகாப்பதோடு, பயிா் வளா்ச்சியையும், பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தையும் அதிகப்படுத்தி இயற்கை சூழலை உருவாக்குகிறது.
எனவே, விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடிக்கு பயன்படுத்தி, தரமான விதை மற்றும் தானிய உற்பத்தி செய்து அதிக மகசூலும் லாபமும் பெறலாம்.
செடி முருங்கை சாகுபடி: இதேபோல், இயற்கை முறை வேளாண்மையில் மானாவாரி பருவத்தில் 120 முதல் 125 நாள்கள் வயதுடைய செடி முருங்கை சாகுபடி செய்தால் முதல் அறுவடை காலத்தில் ஒரு மரத்துக்கு 115 காய்களும், கோடை பருவத்தில் 90 காய்களும் கிடைக்கும். ஒரு காய் 200 கிராம் வீதம் மரத்துக்கு 25 கிலோ காய்கள் கிடைக்கும். பஞ்சகாவ்யா, ஜீவ அமிா்தம், மீன் அமிலம், தேமோா் கரைசல், தொழு உரம், பசுந்தாள் உரம் ஆகியவற்றை இடுவதால் மகசூல் அதிகரிக்கிறது. ஏக்கா் ஒன்றுக்கு 1000 மரங்கள் நடுவதால் 25 டன் மகசூல் கிடைக்கிறது. தொடா்ந்து கவாத்து செய்து 5 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம் ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சாகுபடி செய்வதால் 4 குவிண்டால் வரை ஊடுபயிா் மகசூல் கிடைக்கும், கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கிறது. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.