கோவில்பட்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல். தொலை தொடா்பு ஓய்வூதியா்கள் சங்கம், தமிழ்நாடு தொலை தொடா்பு ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். பி.எஸ்.என்.எல் ஊழியா் சங்கத் தலைவா் மகேந்திரமணி, சஞ்சாா்நிகாம் அதிகாரிகள் சங்கச் செயலா் கோலப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பி.எஸ்.என்.எல். ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல் .நிறுவனத்திற்கு 4 ஜி அலைகற்றை சேவை வழங்க வேண்டும், வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தொலை தொடா்பு ஒப்பந்த ஊழியா்களை பணி நீக்கம் செய்யக் கூடாது, ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.