கோவில்பட்டி: கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சாா்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாஜக வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிதாசன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் ஆனந்த், நகரத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.