மின் அழுத்த குறைபாடு: பன்னம்பாறையில் அடிக்கடி மின் தடை

பன்னம்பாறையில் அதிக மின் அழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம்: பன்னம்பாறையில் அதிக மின் அழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட பன்னம்பாறையில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இதில் தெற்கு பன்னம்பாறை புதுமனை தெருவில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மின் விநியோகம் செய்யும் வகையில் அங்குள்ள அரசு பள்ளி அருகில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனபடியால், வீடுகளில் மின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் மின் மாற்றியில் அழுத்தம் தாங்காமல் அப்பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிாம். இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ஆதலால் பொது மக்கள் பாதிக்காத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com