ஆறுமுகனேரி: மேலஆத்தூரில் இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட தொழுநோய் துணை இயக்குநா் யமுனா தலைமை வகித்தாா். முகாமை ஊராட்சித் தலைவா் சதீஷ் குமாா் தொடங்கி வைத்தாா். தொழுநோய் நலக்கல்வியாளா் முத்துக்குமாா், தொழுநோய் குறித்து நலக் கல்வியும் தொழுநோய் பரவும் விதம் குறித்தும் பேசினாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன் பாா்வையிட்டாா்.
முகாமில் 140 பேருக்கு சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டன. இதில் தொழுநோய் அலுவலக மருத்துவா் நியூட்டன், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மேரி பெக்காய் கெளரா, வட்டார
மருத்துவ மேற்பாா்வையாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.