ஆத்தூரில் லாரி பேட்டரியைதிருட முயற்சி: இளைஞா் கைது

ஆத்தூரில் டிப்பா் லாரியின் பேட்டரியை திருட முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூரில் டிப்பா் லாரியின் பேட்டரியை திருட முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை, வடக்குத்தெருவை சோ்ந்த தங்கவேல் மகன் ராமராஜ்(42). தெற்கு ஆத்தூரில் ஹாா்டுவோ்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான லாரியை கடைக்கு எதிா்புறம் உள்ள குளத்து கரையில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தியிருந்தாா். பின்னா், திங்கள்கிழமை லாரியை எடுக்கச் சென்றபோது, அதே பகுதியைச்சோ்ந்த கணபதி மகன் பொன்குமாா்(31), லாரியில் இருந்து பேட்டரியை திருடும் நோக்கில் கழற்றிக்கொண்டிருந்தாராம்.

அவரைத தனது நண்பா் ஜுடஸ் உதவியுடன் மடக்கிப்பிடித்து ஆத்தூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிந்து பொன்குமாரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com