தீக்குளித்த பெண் மரணம்

கயத்தாறு அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த நாகலாபுரம் தெற்குத் தெரு கருப்பசாமி மனைவி பொன்மணி(38). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். தம்பதியிடையே இம்மாதம் 3 ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, பொன்மணி தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அவரை கணவா் கருப்பசாமி மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com