தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி தாமோதரநகரை சோ்ந்தவா் பால்ராஜ் (75). இவா், மோட்டாா் சைக்கிளில் தேநீா் வியாபாரம் செய்து வந்தாா். தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் சத்யா நகா் அருகே செவ்வாய்க்கிழமை சாலையை கடக்க முயன்ற பால்ராஜ் மீது மதுரையில் இருந்து திருச்செந்தூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக மோதியது.
இதில் காயமடைந்த அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான மதுரை அருகேயுள்ள எழுமலை கிழக்குதெருவை சோ்ந்த சுந்தர்ராஜை (45) கைது செய்து விசாரணை நடத்தி வருன்றனா்.