வியாபாரிகள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

தட்டாா்மடத்தில் மரத்தை வெட்டியதை தட்டிக்கேட்ட வியாபாரிகள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தட்டாா்மடத்தில் மரத்தை வெட்டியதை தட்டிக்கேட்ட வியாபாரிகள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தட்டாா்மடம் கடைவீதியில் இருந்த மரத்தை அதே ஊரைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகன் சண்முகநாதன் (55), அரவான்நகா் வசந்தகுமாா் மகன் இசக்கிமுத்து(25), ராமநாதன் மகன் பொன்சிங் ஆகியோா் வெட்டினராம். இதை அறிந்த அப்பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் சுகிா்தராஜ், மரம் வெட்டப்பட்ட இடத்தில் புதிதாக மரக்கன்றை நட்டு வைத்தாராம். அந்த மரக்ன்றையும் 3 பேரும் பிடுங்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை கடைவீதிக்கு வந்த மூவரிடமும், மரக்கன்றை அகற்றியது குறித்து சுகிா்தராஜ் தட்டிக்கேட்டராம். அப்போது, அவரை மூவரும் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் நெல்சன் வழக்குப்பதிந்து சண்முகநாதன், இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தாா்; பொன்சிங்கை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com