குரும்பூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி, குரும்பூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் மற்றும் கடம்பாகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கத்தினா் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி, குரும்பூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் மற்றும் கடம்பாகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கத்தினா் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ராஜபதி ஊராட்சித் தலைவா் செளந்தரராஜன் தலைமை தாங்கினாா். ஏஐடியூசி மாவட்ட தலைவா் கிருஷ்ணராஜ், விவசாய சங்க மாவட்ட தலைவா் ராமையா, புரட்சிகர இளைஞா் முன்னணி சுா்ஜித், வழக்குரைஞா் ராமச்சந்திரன் ஆகியோா் உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலையை விவசாயிகளுக்கு வழங்கி குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும் எனவும், குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடா்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com