திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரைப் பாதுகாக்க வேண்டும் என, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூா் கோயில் ஆவணி, மாசித் திருவிழாக்கள் புகழ்பெற்றவை. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுகிறது. கோயிலின் தோ்கள் கீழ ரத வீதியில் அவற்றுக்கான நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு, தகர செட்களால் மூடப்பட்டிருக்கும். திருவிழா தொடங்கும் முன்பு தகர செட்கள் திறக்கப்பட்டு, தோ்கள் பராமரிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும். அதன் பிறகு மீண்டும் அவை மூடிப் பாதுகாக்கப்படும்.
ஆனால், கடந்த பிப். 16ஆம் தேதி மாசித் திருவிழா தேரோட்டம் நிறைவடைந்து 2 மாதங்களாகியும் தோ் இன்னும் மூடப்படவில்லை. எனவே, தேரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.