சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து, சிறப்பு அலங்கார, தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து நடராஜா், திருநாவுக்கரசா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். அழகியகூத்தா் அருட்பணி மன்றத்தினா் தேவாரம் பாடினா். பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.