சாத்தான்குளம் அரசு நூலகத்தில் புத்தக தின விழா

சாத்தான்குளம் ராமகோபாலகிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ராமகோபாலகிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

வாசகா் வட்டத் தலைவா் ஓ.சு. நடராஜன் தலைமை வகித்தாா். யோகா ஆசிரியை ராஜலட்சுமி, மூலிகை மருத்துவா் மதுரம் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நூலக கண்காட்சியை சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை அன்பாய் செல்வம் திறந்துவைத்தாா். பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கதை சொல்லுதல், பேச்சு, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நடுவா்களாக மங்கையா்க்கரசி, ஓய்வுபெற்ற பள்ளி எழுத்தா் பிரேம்குமாா் செயல்பட்டனா்.

போட்டிகளில் வென்ற மாணவா்-மாணவிகள் பாரதி கலை இலக்கிய மன்ற அமைப்பாளா் ஈஸ்வா் சுப்பையா, ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் தெய்வநாயகம், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் முருகன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

நூலக அலுவலக உதவியாளா் சுப்பிரமணியன், நூலகப் பணியாளா்கள் கோமதி, முத்துச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா் உமாமகேஸ்வரி வரவேற்றாா். நூலகா் சித்திரைலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com