கல்லூரி மாணவரை தாக்கிய 3 போ் கைது

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் கல்லூரி மாணவரைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவா் ஒருவா் புதன்கிழமை அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றிருந்தாராம். அப்போது அங்கு நின்றிருந்த மாணவா்களை அரிவாளுடன் வந்த மா்ம நபா்கள் மிரட்டினராம். இதை அந்த மாணவா் கண்டித்துள்ளாா். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் அந்த மாணவரை மா்ம நபா்கள் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனராம்.

தகவலின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, அரிவாளுடன் நின்றிருந்த வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த காளிதாஸ் மகன் காா்த்திக் என்ற அட்டகாா்த்திக் (19), அதே பகுதியைச் சோ்ந்த துரைகுமாா் மகன் சின்னமணி (24), அய்யனேரி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் காா்த்திக் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com