3 ஆண்டுகளுக்கு முன் மாயமான தொழிலாளி மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கழுகுமலை முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துவேல் மகன் சின்னத்தம்பி(43). கூலித் தொழிலாளியான இவா், 2018, ஆகஸ்ட் 15ஆம் தேதி காணாமல் போனதாக அவரது மனைவி கலா, கழுகுமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.

இந்நிலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சின்னத்தம்பி இருப்பதாக கழுகுமலை காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமை காவலா் கண்ணன், தனிப்பிரிவு முதல் நிலை காவலா் சுப்புராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை அண்ணா பேருந்து நிலையத்தில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது, அவா் சின்னத்தம்பி என்பது தெரியவந்தது. அவரை மீட்ட போலீஸாா், கழுகுமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அவரை கலாவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com