அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் கல்வி வளா்ச்சி குழு சாா்பில் இலுப்பையூரணி சமுதாய நலக்கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு, இளஞ்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் பிரபாவளவன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி முன்னிலை வகித்தாா். அம்பேத்கா் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற விழாவில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும் தாமஸ் நகா் பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிடாா் ஒருங்கிணைப்பாளா் மைக்கேல்ராஜ், இலுப்பையூரணி வாா்டு உறுப்பினா் சரஸ்வதி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.