திருச்செந்தூா் கோயிலில் ரூ. 2.33 கோடிஉண்டியல் வருவாய்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.2.33 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.2.33 கோடி கிடைத்துள்ளது.

இக்கோயிவிலில் மாதந்தோறும் இரு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 8-ஆம் தேதி எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரத்து 943 காணிக்கை கிடைத்தது. 2-வது முறையாக கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனாா் திருமண மண்டபத்தில் கோவில் இணை ஆணையா்(பொறுப்பு) சி.குமரதுரை தலைமையில் உதவி ஆணையா்கள் ரத்தினவேல் பாண்டியன் (நாகா்கோவில்), வெங்கடேஷ்(திருச்செந்தூா்) உள்ளிட்டோா் முன்னிலையில் உண்டியல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில், உப கோயிலான திருச்செந்தூா் சிவன் கோயில், நாசரேத் கோயில், கிருஷ்ணாபுரம் கோயில், குலசேகரன்பட்டினம் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில், ரூ.85 லட்சத்து 41 ஆயிரத்து 896 கிடைத்துள்ளது. மொத்தம் இந்த மாதத்தில் ரூ. 2 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 839 காணிக்கை பத்தா்கள் செலுத்தியிருந்தனா். இதேபோல், தங்கம் 1,925 கிராமும், வெள்ளி 51 ஆயிரத்து 65 கிராமும், 62 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com