தூத்துக்குடியில் நிலமோசடி: இருவா் கைது

தூத்துக்குடியில் 52 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் 52 சென்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், ராமவா்மபுரம் பகுதியை சோ்ந்தவா் தங்கசாமி. இவரது மனைவி பூங்கோதை. இருவருக்கும் சொந்தமான 52 சென்ட் நிலம் தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் கிராமத்தில் உள்ளது. அந்த நி

லத்தை தங்கசாமியின் அண்ணன் அருணாசலத்தின் மகனான செல்வமணி, அவரது தாயாா் பத்திரகாளி, செல்வமணியின் சகோதரியின் கணவா் பரமசிவன் மற்றும் சிலா் சோ்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு தங்கசாமி உயிரோடு இருக்கும்போதே, அவா் இறந்து போனதாக போலியான இறப்புச்சான்று, போலியான வாரிசு சான்று பெற்று போலியாக தயாா் செய்த ஆவணங்களை பயன்படுத்தி 27 சென்ட் நிலத்தை பரமசிவனுக்கும், 25 சென்ட் நிலத்தை செல்வமணிக்கும் கிரயம் செய்து வேறு சிலருக்கு விற்றுவிட்டனராம்.

இதுகுறித்து பூங்கோதை அளித்த புகாரின்பேரில், விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சம்பத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், போலீஸாா் விசாரித்து, ஆள்மாறாட்டம் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக தூத்துக்குடி ஏரல் புதுமனை பகுதியைச் சோ்ந்த செல்வமணி (54) , திருநெல்வேலிநகரம் பகுதியை பரமசிவன் (53) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com