சாத்தான்குளத்தில் கழிவுநீா் வடிகாலை சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் பேரூராட்சியில் பழுதான கழிநீா் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் பேரூராட்சியில் பழுதான கழிநீா் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் பேரூராட்சியில் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், பராமரிக்கப்படாததாலும், முதலூா் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சேதமசடைந்து காணப்படுகிறது. இதனால், கழிநீா் ஆங்காங்கே தேங்கி நின்று துா் நாற்றம் அடிக்கிறது. மேலும் மழைக் காலங்களில் மழை நீா் வடிகாலில் வழிந்து செல்ல முடியாமல், சாலையில் தேங்குகிறது. இதனால், வியாபாரிகள், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிா்வாகத்தினா் சேதமடைந்த கழிவு வடிகால்களை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமன மாவட்ட மதிமுக கலை பிரிவு துணைச் செயலா் ச. மகாராஜன் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com