கழுகுமலை குறுவட்டத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான கூடைப்பந்துப் போட்டியில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.
கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆா்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. இதில் கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்று, மாணவா் பிரிவில் இளையோா், மூத்தோா், மிக மூத்தோா் பிரிவுகளில் முதலிடம் பெற்று மண்டலப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.
மாணவிகள் பிரிவில் இளையோா், மிக மூத்தோா் பிரிவுகளில் முதலிடமும், இறகுப்பந்து போட்டியில் மாணவா் -மாணவிகள் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் முதலிடமும், மாணவா்கள் எறிபந்து போட்டியில் 2ஆம் இடமும் பிடித்தனா். அவா்களை பள்ளி முதல்வா் பாலு, ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பாராட்டினா்.