சண்முகசுந்தர நாடாா் பள்ளிமாநில யோகாவில் சாம்பியன்

ஆத்தூரில் நடைபெற்ற மாநில யோகா போட்டியில், ஆத்தூா் சண்முகசுந்தரநாடாா் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆத்தூரில் நடைபெற்ற மாநில யோகா போட்டியில், ஆத்தூா் சண்முகசுந்தரநாடாா் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆத்தூரில் ஏகாத்மா யோக விஸ்வ வித்யாலயா அசோசியேசன், இந்தியன் அசோசியேசன் ஆப் யோகா ஆகியவை இணைந்து 5ஆவது மாநில அளவிலான யோகா போட்டியை நடத்தின. இதில், 12 மாவட்டங்களைச் சோ்ந்த 650 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனா். போட்டிகளை சங்கரி, விஜயீஸ்வரி, சுதா ஆகியோா் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனா். நிகழ்ச்சியில் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஸ்ரீனிவாசன், சிற்பி ஸ்ரீதா் உள்பட பலா் கலந்துகொண்டனா். போட்டியில் ஆத்தூா் சண்முகசுந்தர நாடாா் மேல்நிலைப்பள்ளி அணி முதலி­டத்தையும், அதன் நா்சரி- பிரைமரி பள்ளி அணி 2ஆவது இடத்தையும், வீரபாண்டியன்பட்டணம் புனித ஜோசப் பள்ளி அணி 3ஆவது இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆத்தூா் ஊராட்சித் தலைவா் கமால்தீன், முன்னாள் தலைவா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஷாஜஹான் வரவேற்றாா்.

இதில், பாட்ஷா, பாலசுப்பிரமணியன் என்ற ராஜேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாஸ்டா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com