திருச்செந்தூா் கோயிலில் ஆளுநா் தமிழிசை தரிசனம்
By DIN | Published On : 11th December 2022 11:10 PM | Last Updated : 11th December 2022 11:10 PM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தெலங்கானா- புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
இதையொட்டி, திருக்கோயில் விருந்தினா் மாளிகை முன், ஆளுநருக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் சாா்பில் சால்வை அணிவித்தும், கோயில் சண்முக விலாச மண்டபத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அவா் தனது கும்பத்துடன் கோயிலில் மூலவா், சண்முகா், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தாா்.