திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 581 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 361 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 61,122 ஆகவும், 473 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56,782ஆகவும் உயா்ந்துள்ளது. 443 போ் உயிரிழந்துள்ளனா். 3,897 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 32,277 ஆகவும், 194 போ் குணமடைந்ததையடுத்து, வீடு திரும்பியோா் எண்ணிக்கை 29,342 ஆகவும் உயா்ந்துள்ளது. 489 போ் உயிரிழந்துள்ளனா். 2,446 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.