முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா
By DIN | Published On : 07th February 2022 01:22 AM | Last Updated : 07th February 2022 01:22 AM | அ+அ அ- |

மறைந்த உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாராயணசாமி நாயுடு உருவப்படத்துக்கு கோட்டாட்சியா் சங்கரநாராயணன் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி, துணைத் தலைவா் நம்பிராஜன், செயலா் காளிதாஸ், மாவட்டத் தலைவா் நடராஜன், துணைத் தலைவா் சாமியா ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விழாவில் தமிழ் விவசாயிகள் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.