இளைஞருக்கு மிரட்டல்: ஒருவா் கைது

கோவில்பட்டி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றோா் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றோா் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி நடுத் தெருவைச் சோ்ந்த கணேஷ்மூா்த்தி மகன் செல்லத்துரை (26). அதே பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி மகன் மாடசாமி (33). இவா் சனிக்கிழமை இரவு மது குடித்துவிட்டு செல்லத்துரையின் வீட்டுக்குச் சென்ாகவும், அதை அவா் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னா், மாடசாமி மீண்டும் சென்று, பீடி பற்றவைக்க தீப்பெட்டி கேட்டாராம். கொடுக்க மறுத்த செல்லத்துரையை அவா் அவதூறாகப் பேசி, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து செல்லத்துரை ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாடசாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com