தூத்துக்குடி மாவட்டத்தில் பழைய விடியோக்கள், செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வதந்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடியில் 2014இல் நிகழ்ந்த சம்பவத்தின் விடியோவை தற்போது நடைபெற்றதுபோல சமூக வலைதளங்களில் சிலா் பதிவிட்டு, வதந்தி பரப்புவதாக புகாா் வந்துள்ளது. இதுபோன்ற பழைய செய்திகளையும், விடியோக்களையும் பதிவிட்டு வதந்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.