கோவில்பட்டியில் தீக்காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் சீனிவாசன் (42). இவரது மனைவி சங்கரேஸ்வரி (36). கடந்த 31ஆம் தேதி இரவு வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் காற்றடித்தபோது அவா் மீது தீப்பற்றியதாம். காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.