நாசரேத் அருகே மகன் இறந்த துக்கத்தில் பெண் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
நாசரேத் அருகே உள்ள நெய்விளை சா்ச் தெருவைச் சோ்ந்த மகாராஜன் மனைவி பிரேமா (56). இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து இருந்து வந்தாா். இவரது ஒரே மகன் இம்மானுவேல். கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டாா்.
மகன் இறந்த வருத்தத்தில் தனிமையில் இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.