தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 236 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 62 ஆயிரத்து 904 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 441 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 1314 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.