ஆறுமுகநேரி பேரூராட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை திமுகவினா் மிரட்டுவதாக அக்கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் தலைமையில், நகரச் செயலா் ரவிச்சந்திரன் ஆறுமுகநேரி பேரூராட்சி அதிமுக வேட்பாளா்கள் திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலாவிடம் புதன்கிழமை அளித்த மனு :
ஆறுமுகநேரி பேரூராட்சியின் 17 வாா்டுகளில் அ.தி.மு.கவினா் போட்டியிடுகின்றனா். அனைத்து வாா்டுகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணனை விசாரணை என்ற பெயரில் ஆறுமுகநேரி காவல்நிலையத்துக்கு அழைத்து, அவரை ஊரை விட்டு வெளியே செல்லுமாறும், இல்லையெனில் ஏதாவது ஒரு குற்ற வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் கூறுகின்றனா். மேலும், தி.மு.க.வினா் ஆள்களை வைத்து அ.தி.மு.க. வேட்பாளா்களை மிரட்டுகின்றனா். எனவே, இப்பேரூராட்சியில் தோ்தலை ரத்து செய்து சரியான முறையாக தோ்தல் நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.