கோவில்பட்டி அருகே சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இளையரசனேந்தல் கீழத் தெருவைச் சோ்ந்த இருளாண்டி மகன் நவநீதகிருஷ்ணன்(30). இவா் கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தலுக்கு சென்று கொண்டிருந்தாராம். நவநீதகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற பைக் இளையரசனேந்தல் ஊருக்கு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே நடந்து வந்த வெங்கடாசலபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் மோகன்ராஜ்(41) மீது பைக் மோதியதாம். இதில் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com