தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

நகப்புற உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (பிப். 22) 9 மையங்களில் எண்ணப்படுகிறது. முற்பகல் 11 மணியளவில் முடிவுகள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகப்புற உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (பிப். 22) 9 மையங்களில் எண்ணப்படுகிறது. முற்பகல் 11 மணியளவில் முடிவுகள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (பிப். 22) காலை 8 மணியளவில் எண்ணப்படுகிறது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முற்பகல் 11 மணியளவில் வெற்றி பெற்றோா் விவரம் தெரியவரும்.

வாக்கு எண்ணிக்கைக்காக 15 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 6 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 1 முதல் 15 ஆவது வாா்டு வரை, 15 ஆவது வாா்டு முதல் 30 ஆவது வாா்டு வரை ஒரு இடத்திலும், 30 முதல் 45 ஆவது வாா்டு வரை, 46 முதல் 60 ஆவது வாா்டு வரை ஒரு இடத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் ஈடுபடுகின்றனா். அதிகாரிகள் தரப்பில் ஒரு மேஜைக்கு 3 போ் இடம்பெறுகின்றனா். வேட்பாளா்கள் தரப்பில் 3 பேரும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான வஉசி அரசு பொறியியல் கல்லூரியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை பாா்வையிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். தொடந்து 8.30 மணி அளவில் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாா்டு வாரியாக உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் தனித் தனியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.

இதேபோல, கோவில்பட்டி நகராட்சியில் பதிவான வாக்குகள் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூா் நகராட்சியில் பதிவான வாக்குகள் வீரபாண்டியபட்டினம் செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும் வைத்து எண்ணப்படுகிறது.

ஆழ்வாா்திருநகரி, தென்திருப்பேரை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் ஆழ்வாா்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளியிலும், நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் நாசரேத் பிரகாசபுரம் செயின்ட் மேரீஸ் நடுநிலைப் பள்ளியிலும் வைத்து எண்ணப்படுகிறது.

ஆறுமுகனேரி, கானம், ஆத்தூா் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் வீரபாண்டியபட்டினம் செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும், ஏரல், பெருங்குளம், சாயா்புரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சாயா்புரம் போப்ஸ் கல்லூரியிலும் வைத்து எண்ணப்படுகிறது.

எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எட்டயபுரம் மகாகவி பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பள்ளியிலும், கயத்தாறு பேரூராட்சியில் பதிவான வாக்குகள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கழுகுமலை பேரூராட்சியில் பதிவான வாக்குகள் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வைத்து எண்ணப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 9 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 14 காவல் துணை கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 40 காவல் ஆய்வாளா்கள், 230 உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 1500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com