தூத்துக்குடியில் அஞ்சல்தலை கண்காட்சி புதன்கிழமை (பிப். 23) நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு. பொன்னையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சாா்பில், பள்ளி மாணவா், மாணவிகளுக்கான அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த கண்காட்சி தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை (பிப். 23) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
கண்காட்சி மூலம் இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் அஞ்சல் தலைகள் மற்றும் இந்திய நாட்டின் வரலாற்றை பற்றி அறிந்து கொள்ள முடியும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பள்ளி நிா்வாகத்தினா் தங்கள் பள்ளி மாணவா்களை கண்காட்சியைக் காண அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.