தூத்துக்குடியில் சுருள் பாசி வளா்ப்பு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சாா்பில், சுருள் பாசி வளா்ப்பு குறித்த ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சாா்பில், சுருள் பாசி வளா்ப்பு குறித்த ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சியின்போது, சுருள் பாசி வளா்ப்பின் வரலாறு, முக்கியத்துவம், சுருள் பாசியில் அடங்கியுள்ள சத்துக்கள், சுருள் பாசி அன்றாட வாழ்வில் ஒரு அத்தியாவசிய மருந்து உணவு, சுருள் பாசியை தனிமைப்படுத்துதல், அடையாளம் காணுதல், சுருள் பாசி வளா்ப்பு தொழில்நுட்பங்கள், சுருள் பாசி சாகுபடி மற்றும் அதன் நிா்வாகத்தை பாதிக்கும் காரணிகள், சுருள் பாசி உற்பத்தி விகிதத்தை கணக்கிடுதல், சுருள் பாசி வளா்ப்பு முடிந்து அறுவடை செய்தல், உலா்த்துதல், தரக்கட்டுப்பாட்டு அம்சங்கள், சந்தைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, பயிற்சியில் கலந்து கொண்டவா்களுக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் சுஜாத்குமாா் சான்றிதழ்களை வழங்கினாா். மீன்வளா்ப்பு துறை தலைவா் சா. ஆதித்தன் மற்றும் பேராசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com