சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு பயிற்சி

சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டார வேளாண் துறை மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து சொக்கலிங்கபுரத்தில் தென்னையில் வெள்ளை ஈக்கம் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் சுஜாதா முன்னிலை வகித்தாா். இதில், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் ஆா்த்தி, அபா்ணா, அபிநயா, ஐஸ்வா்யாஸ்ரீ, கவிப்பிரியா, பின்னு, முல்லை ஆகியோா் பங்கேற்று தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு 1கிலோ மைதாவை 6 லிட்டா் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும் எனவும், தென்னை மரத்தின் ஒளிச்சோ்க்கை பாதிப்பதால் விளைச்சல் குறைவதை கட்டுப்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனா். இதில் விவசாயிகள் ,வேளாண்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com