தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா
By DIN | Published On : 23rd February 2022 12:12 AM | Last Updated : 23rd February 2022 12:12 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 904ஆக அதிகரித்துள்ளது.
16 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 343ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இதுவரை 447 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது 114 போ் சிகிச்சையில் உள்ளனா்.