மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 412 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 128 பேரில் 10 போ் கா்ப்பிணி பெண்கள் ஆவா். அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருந்தபோதிலும் அவருக்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com